கடத்தல் லாரிகளை மடக்கக் கூடாது! போலிசாருக்கு உயர் அலுவலர்கள் உத்தரவாம்?

கடத்தல் லாரிகளை மடக்கக் கூடாது! போலிசாருக்கு உயர் அலுவலர்கள் உத்தரவாம்?

 ம.பா.கெஜராஜ்,

 சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் மற்றும் மண் எடுத்துச் செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்தக் கூடாது என்று கோவை போலிசாருக்கு மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

 கோவை மாவட்டத்தின் கேரள எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியா கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுகிறது.

 அவற்றை சோதனைச்சாவடிகளில் உள்ள நேர்மையான அலுவலர்கள் தடுத்து வழக்கு பதிந்து வருகிறார்கள்.

  இதனால் மேற்படி கடத்தல் கும்பல் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு அய்யா எங்களது கடத்தல் தொழிலுக்கு உங்க போலிஸ்காருங்க தடை போடுறாங்க சாமி காப்பாத்துங்க என்று கதறியிருக்கிறார்கள்.

 இதனால் மனமிளகிய உயர் அதிகாரிகள் சட்டவிரோதமாக செல்லும் லாரிகளை தடுக்க வேண்டாம் என்று காவல்துறையினருக்கு உத்தரவு போடப்பட்டுள்ளனர்.

 குறிப்பாக,கோவை மாவட்டம் திருப்பூர் காரமடை போன்ற இடங்களில் இருக்கும் குவாரிகளில் இருந்து எம்.சான்ட், ஜல்லி, கருங்கல்,மெட்டல்,கிரானைட் போன்றவற்றை டிப்பர் லாரிகளில் ஏற்றி செல்லப்படுகிறது.

 இவை தமிழக மாநில கேரளா எல்லைகளில் வாளையாறு ,வழுக்கள்,வீரப்ப கவுண்டனூர்,குப்பன் கவுண்டனூர் , ஜமீன்காளையாபுரம் ,கோபலபுரம்,மீனாட்சிபுரம் வளர்ந்தாய் மரம். 9 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை கடந்துதான் செல்ல முடியும்.

  மேலும், வடக்குபாளையம்காவல் நிலையம்,நடுப்பூனி சோதனைச் சாவடி மற்றும்

ஆனைமலை காவல் நிலையம் மீனாட்சிபுரம் ரயில்வே கேட் சோதனைச் சாவடி வழியாக கேரளாவுக்கு 50 டன் முதல் 60 டன் வரை மண், கல், எம் சான்ட் போன்றவை இல்லீகலாக கடத்தப்படுகிறது.

 இப்படி, நாள் ஒன்றுக்கு 2000 டாரஸ் லாரிகளில் எடுத்துச் செல்வதாக தகவல் வந்துள்ளது.

 இது சம்பந்தமாக சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள எல்லைக் காவல் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது கேரளாவுக்கு கல் மண் ஜல்லி எடுத்து செல்லும் லாரிகளை சோதனை செய்ய வேண்டாம் என்ற வாய்மொழி உத்தரவை உயர் அதிகாரிகள் சொல்லி உள்ளதாக அதிர்ச்சித் தகவலை கூறினர்.

 அதற்காக விசேஷமாக ஒரு லாரிக்கு ஒரு ரசீது கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் ஒவ்வொருவரிடமும்  2000 முதல் 2500 வரை  மாமூல் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இந்த குற்றச்சாட்டு உண்மை எனில் ஒரு நாள் வசூல் எவ்வலவு என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.