பஸ்ஸை அடித்து தூக்கிய ஸ்கூட்டர்! தோடா!!

பஸ்ஸை அடித்து தூக்கிய ஸ்கூட்டர்! தோடா!!

  கு.அசோக்,

   திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த தொட்டிகிணறு பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு டி18 எண் அரசு பேருந்து கதிரிமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரிகுமார் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பேருந்தின் பின்னாடி வந்தார்.

    அப்போது கதிரிமங்கலம் பகுதியில் அரசு பேருந்து பயணிகளை இறக்க  திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் இருசக்கர வாகனத்தில்  வந்த ஹரிகுமார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பேருந்தின் பின்பக்கமாக மோதினார்.

   இதனால் அரசு பேருந்து பின்புறம் சேதமடைந்தது ஆனால் இருசக்கர வாகனம்லவ்வளவாக சேதமடையவில்லை.

  ஹரி குமாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

  ஸ்கூட்டரிடம் அடிபட்ட பேருந்தில் பெரிய சொட்டை ஏற்பட்டது "என்னங்க செய்யறது நான் அரசு பஸ் ஆச்சே" என்று முனகிக்கொண்டிருந்தது.