திருமணம் நடந்த நாலாவது இரவில் சாவு! இது தான் காரணம்!!

கவுதம்,
திருமணம் நடந்து முடிந்து நான்கு நாட்களில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அடுத்த பாளையம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவருக்கு கடந்த 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் குமுதா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுது).
இந்நிலையில் நேற்று முன்தினம் புது மாப்பிள்ளை தியாகராஜன் கழிவறைக்கு சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கழிவறையின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, தியாகராஜன் கழிவறை ஜன்னலின் கயிற்றினால் தூக்கிட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
பதறிய குடும்பத்தினர், தியாகராஜனை தூக்கு கயிற்றிலிருந்து மீட்டு சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தியாகராஜன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனை கேட்டு, தியாகராஜனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இது காண்போரை கண் கலங்க செய்தது.
புது கல்யாண தம்பதிகளுக்கு தாம்பத்ய உறவு தொடர்பாக பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது.
மேற்படி சந்தேகம் தொடர்பாக தியாகராஜன் எழுப்பிய சர்ச்சைக்கு அவரது புது மனைவி ஏகத்துக்கும் எகிறி குதித்துள்ளார்.
புது கணவரை சகட்டுமேனிக்கு வசைபாடினார். அதைத் தொடர்ந்து இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார் தியாகராஜன்.