நாய்களை அடிக்கக் கூடாது! அசைவம் சாப்பிடக்கூடாது! தமிழகத்தின் ஆச்சர்ய கிராமம்!

தமிழன் ராஜா,
தமிழகத்தில் அசைவ கிராமத்தைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
சின்ன குழந்தை முதல் சிக்கன் 65 கேட்டு உண்ணும் இந்த காலத்தில் வாடிமனைப்பட்டி என்கிற கிராமத்தில் அனைவரும் சைவ அசைவ உணவுகளை உண்ணாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
அது பற்றின விவரத்தை பார்ப்போம்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு அடுத்த வாடிமனைப்பட்டி கிராமத்தில் சுமார் 50க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 1963-ம் ஆண்டிற்கு முன்னர் வரை சைவம், அசைவம் என அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்துள்ளனர்.
1963ஆம் ஆண்டு கிராமத்திற்கு வள்ளலாரின் சுத்த சன்மார்க்க சங்கத்திலிருந்து வந்த முத்தையா என்கிற சாமியார், மாமிசம் உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறியுள்ளார்.
அதுமுதல் அந்த கிராம மக்கள் சைவத்திற்கு மாறியுள்ளனர்.
அது மட்ட்மின்றி இந்தகிராமத்து ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் வெளியூர் பெண்களும் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், சைவத்திற்கு மாறி விட வேண்டும்.
அதே போல ஆடு கோழிகளை பலி கொடுக்கவோ அல்லது இறைச்சிக்காகவோ அறுக்கக்கூடாது.
இது போன்ற காரணத்தால் ஆடு, கோழிகள் வளர்க்கப்படுவதில்லை.
ஆனால் ஏராளமான பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
அதே போல் கிராம கண்மாயில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அவர்கள் பிடிப்பது இல்லை. இங்குள்ள பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை யாருக்கும் மது பழக்கம் கிடையாது. அதே போல் வெளியூரில் உறவினர் வீட்டுக்கு சென்றால் கூட சைவ உணவுகளை மட்டுமே உண்பதாக இங்கு வசிக்கும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும் மரங்களை அழிக்க மாட்டோம். இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் ஊரில் மாடு வளர்ப்பதுண்டு. நாங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு வாராவாரம் திங்கட்கிழமை சுத்தமாக குளிக்க வைத்து அன்று ஒரு நாள் முழுவதும் ஓய்வு கொடுத்து விடுவோம்.
எங்கள் கிராமத்திற்கு வெளியூரிலிருந்து திருமணமாகி வரும் பெண்களும் அசைவம் சாப்பிடுவதை கைவிட்டு சைவம் மட்டுமே சாப்பிடுகிறோம் என்கிறார்கள் பெருமிதமாய்.
காக்காய், குருவி ஆகியவைகளுக்கு தினமும் காலை மாலை என தீணி போடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இந்த கிராமத்தினர்.