நாளை தேர்தலுக்கு அலுவலர்கள் ரெடி!

கு.அசோக்,
வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடக்கவுள்ளதால் வாக்குசீட்டுகளும் பெட்டிகளும் கொரோனா தடுப்பு உபகரணங்களும் அந்தந்த மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றி அனுப்பப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது முதற்கட்ட தேர்தலானது காட்பாடி,.கேவிக்குப்பம்,குடியாத்தம்,பேர்ணாம்பட்டு ஆகிய 4 ஒன்றியங்களுக்கு நடந்தது முடிந்தது.
இதில் மொத்தம் 77.63சதவிகித வாக்குகள் பதிவாகியது.
இந்த நிலையில் வேலூர்,.கணியம்பாடி ,அனைக்கட்டு ஆகிய ஒன்றியங்களுக்கு 9 ஆம் தேதியான நாளை இரண்டாம் கட்ட தேர்தலானது நடக்கிறது.
இதற்காக வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுகள் கொரோனா தடுப்பு உபகரணங்கள் ஆகியவைகள் லாரிகள் மற்றும் வேன் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இவைகள் அந்தந்த வாக்குபதிவு மையங்களில் வைக்கப்பட்டு நாளை இரண்டாம் கட்ட தேர்தலானது நடக்கவுள்ளது.
இதில் பணியாற்றவுள்ள வாக்குசாவடி மைய அலுவலர்கள் பணியாளர்களுக்கும் எந்தெந்த மையங்களில் பணியாற்ற செல்ல வேண்டும் என்ற பணியாணையும் வழங்கப்பட்டது.
இதே போன்று அனைக்கட்டு,கணியம்பாடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குசீட்டுகள்,வாக்குபெட்டிகள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களும் வாக்குபதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.