விவசாயிகளின் பொருட்களை ஜப்தி செய்வது எந்த வகையில் நியாயம்!

ஜி.கே.சேகரன்,
ஆறுகளிலும் ஏரிகளிலும் வஜ்ரம் தொழிற்சாலைகளின் கழிவுகளை கலப்பதை தடுக்க கோரியும், வங்கிகள் விவசாயிகள் பொருட்களை ஜப்தி செய்வதை கைவிடக் கோரியும் விவசாயிகள் மீது வழக்கு தொடர்வதை ரத்து செய்யக்கோரி வேலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்றனர்.
¢ இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில் ஆறுகளில் நிலத்தடி நீர் இல்லாமல் கிணறுகள் வற்றிப் போவதாகவும் இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதனை தடுக்க கோரியும், பேர்ணாம்பட்டு பகுதிகளில் வஜ்ரம் தொழிற்சாலை கழிவுகள் நேரடியாக ஏரிகள் கலப்பதால் குடிநீரும் மாசுபடுகிறது.
இதன் மூலம் பயன்பெறும் விவசாய வேளாண் நிலங்களும் பாதிக்கப்படுகிறது எனவே இது தடுக்க கோரியும் வங்கியில் கடன்பெற்ற விவசாயிகளை அவர்களின் பொருட்களை ஜப்தி செய்வது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
இதன் மூலம் மன உளைச்சலுக்கு ஆளாகி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மேலும் கடனைப் பெற்று கட்ட முடியாத விவசாயிகள் மீது பொய் வழக்கு தொடர்கின்றனர் இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள்.