கலெக்டரே குப்பையை அகற்றி சாதனை!

ஜி.கே.சேகரன்,

  இராணிப்பேட்டை மாவட்டத்தில் உலக சாதனை முயற்சியாக 2500 கிலோமீட்டர் தூர பரப்பளவில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை மூன்று மணிநேரத்துக்குள் அகற்றும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

  இராணிப்பேட்டை மாவட்டத்தில் உலக சாதனை முயற்சியாக 2500 கிலோமீட்டர் தூர பரப்பளவில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை மூன்று மணிநேரத்துக்குள் அகற்றும் நிகழ்ச்சியை இன்று காலை 7 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

 இராணிப்பேட்டை சிறு மலர் மடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் எதிரே உள்ள தனியார் மருத்துவமனை அருகில் துவங்கிய இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லோகநாயகி, ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத்தலைவர் திரு ரமேஷ் கர்ணா,நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ராணிப்பேட்டை தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய தலைவர் திரு ரமேஷ் பிரசாத், வாலாஜா தாசில்தார் ஆனந்தன், நகராட்சி தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் பாத்திமா, நகராட்சி துப்புரவு அலுவலர் அப்துல் ரஹீம், ஆய்வாளர் தேவிபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

  அய்யா அப்படியே தோல்கழிவு குரோமியம் கழிவை பாலாற்றில் கலக்குறாங்களே அதையும் கொஞ்சம் கவனியுங்களேன்.