திருட்டு மணல் பதுக்கல் குடோனாக மாறிய அரசு பள்ளிக்கூடம்! ஆட்சியர் நடவடிக்கை!

திருட்டு மணல் பதுக்கல் குடோனாக மாறிய அரசு பள்ளிக்கூடம்! ஆட்சியர் நடவடிக்கை!

கு.அசோக்,

வள்ளிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குவியல் குவியலாக திருட்டு மணல் சேமித்து வைத்திருந்ததை புகாரின் அடிப்படையில் காட்பாடி வட்டாச்சியர் விசாரணை கடும் நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

  வேலூர்மாவட்டம், காட்பாடி வள்ளிமலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியினுள் மேல்பாடி பொன்னை ஆற்றில் இருந்து திருட்டு தனமாக பல டன் மணலை கொண்டு வந்து பள்ளி வளாகத்திலேயே சேமிக்கப்பட்டுள்ளதாக சமூக வளைதலங்களில் செய்திகள் பரவியது.

  வட்டாச்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறையோடு சென்று பள்ளி வளாகத்தில் அனுமதியின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த மணலை பறிமுதல் செய்தனர்.

  பல யூனிட் மணல் எப்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கே தெரியாமல் குவிக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை இதுகுறித்து புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் காட்பாடி வட்டாச்சியருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் மணல் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணையும் தொடர்கிறது.

  இதில் அரசியல் பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இந்நிலையில் பள்ளி வளாகத்தில் மணலை பதுக்கியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.