நில அதிர்வு பகுதியில் இயதிரங்கள் கொண்டு ஆய்வு நடத்தப்படும்! மத்தியக்குழு தகவல்!

கு.அசோக்,
நில அதிர்வு தொடர்பாக ஆய்வுகளையும் தகவல்களையும் திரட்டிய பின்னர் நில அதிர்வு கண்காணிப்பு இயந்திரங்களை கொண்டு ஆய்வு நடத்தவுள்ளோம் அதன் பின்னரே முழு தகவலை தெரிவிக்க முடியும் - பேர்ணாம்பட்டில் ஆய்வு செய்த மத்திய புவியியல் ஆய்வுத்துறையினர் பேட்டி!
வேலூர்மாவட்டம், பேர்ணாம்பட்டு தரைக்காடு பகுதியில் நில அதிர்வு தொடர்பாக அதிகாரிகள் மத்திய புவியியல் கண்காணிப்பு குழுவினர் டெல்லியை சேர்ந்த அனிமந்த் தாகூர் மற்றும் சென்னையை சேர்ந்த சிவக்குமார் மற்றும் தனியார் கல்லூரி புவியியல்துறை பேராசிரியர் கணபதி ஆகியோர் இன்று தரைக்காடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகள் குறித்து தகவலை மக்களிடம் கேட்டறிந்தனர்
பின்னர் டெல்லியை சேர்ந்த இந்திய புவியியல் ஆய்வுத்துறை உதவி புவியியலாளர் அனிமந்த் தாகூர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இப்பகுதியில் தொடர்ந்து சிலநாட்களாக நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
¢ அதனால் எதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா பாதிப்புகள் என்ன என்பதுகுறித்தும் கேட்டறிந்தோம்.
இதன் பின்னர் நில அதிர்வை கண்டறியும் இயந்திரத்தை கொண்டு ஆய்வு செய்த பின்னரே முழு தகவல்களும் தெரியவரும் என்று கூறினார்
இதன் பின்னர் சென்னை புவியியல் ஆராய்ச்சி புவியியலாளர் சிவக்குமார் கூறுகையில் நில அதிர்வு உண்மை தன்மை குறித்த தகவல்களை மக்களிடம் கேட்டறிந்தோம் ஆய்வு செய்தோம் முழு விவரங்களையும் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்க உள்ளதாக கூறினார்.