பணி சரியில்லை எனில் காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுங்க! போலிசுக்கு உத்தரவிட்ட ஆட்சியர்!

ஜி.கே.சேகரன்,
மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று சமுதாயத்திற்கு சேவை செய்யும் துறைகளில் பணியாற்ற வேண்டும் மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு - சத்துவாச்சாரி பகுதிகளில் சாலைகளை ஆட்சியர் ஆய்வு தரமற்ற முறையில் பாதாள சாக்கடை சிலாப்கள் உடைந்திருந்து ஆபத்தான முறையில் இருந்ததால் ஒப்பந்ததாரரை அழைத்து எச்சரிக்கை அதனை செய்யவில்லை என சட்டப்படி வழக்குபதிவு செய்யவும் ஆட்சியர் உத்தரவு.
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் ஹோலி கிராஸ் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் மாதிரி பள்ளி முதல்வர் தாரகேஸ்வரி உள்ளிட்டோரும் திரளான மாணவ,மாணவிகளும் பெற்றோர்களும் பங்கேற்றனர்
¢ இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் நூறு சதவிகிதமாக உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது மேலும் கல்வியில் நீங்கள் கவனம் செலுத்தி நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்காக சேவை செய்யும் துறைகளில் பணியாற்ற வேண்டுமென சொன்னார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சத்துவாச்சாரி காந்தி நகர் மந்தை வெளி, சக்தி நகர்,பூங்காநகர் ஆகிய பகுதிகளில் ஆட்சியர் சாலைகளை ஆய்வு செய்தார் அப்போது சாலையின் நடுவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளிகளின் மூடிகள் சிலாப்கள் உடைந்து மக்கள் தவறி உள்ளே விழும் ஆபத்தான நிலையில் இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் ஒப்பந்ததாரரை வரவழைத்து எச்சரிக்கை செய்ததுடன் மேலும் அவர் அப்பணியை செய்யவில்லை என்றால் அவர் மீது வழக்குபதிவு செய்து சட்டபடியான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வால் ஒப்பந்ததாரர்களும் அதிகாரிகளும் அதிர்ச்சிக்குள்ளாகினார்கள்