பாம்பு கடித்து இறந்தவரின் குடும்பத்துக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நிதி!

பாம்பு கடித்து இறந்தவரின் குடும்பத்துக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நிதி!

 ஜி.கே.சேகரன்,

  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பீஞ்சமந்தை ஊராட்சி அல்லேரி மலைகிராமத்தில் உள்ள ஆட்டுக்காரன்துரையில் பாம்பு கடித்து மரணமடைந்த திரு.சங்கர் என்பவரின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து ரூ.50,000-க்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் வழங்கினார்.

  மேலும் அல்லேரியில் உள்ள உண்டி, உறையிட ஆரம்ப பள்ளியில் நடைப்பெற்று வந்த கலைஞரின் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவேற்ற முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 அடுத்ததாக அமருதவல்லிமேடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைப்பெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆய்வு செய்ததுடன், மருதவல்லிமேடு குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 

  இந்த ஆய்வின் போது மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் திரு.மு.பாபு, மாவட்ட வன அலுவலர் திரு.கலாநிதி, இ.வ.ப., மற்றும் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.செந்தில், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கவிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திரு.ராமச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.