தமிழ் தெரிந்தவரே கீழமை நீதிபதியாக வேண்டும்! வேலூர் வழக்கறிஞர்கள் கோரிக்கை!

கு.அசோக்,
வேலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அருகில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வழக்கறிஞர் ரவி தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
இதில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, பாலசந்தர், சண்முகம், பாலு உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
வழக்கறிஞர்கள் பணி செய்யும் போது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும், வழக்கறிஞர் சேம நல நிதி 10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு தலைவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பார் கவுன்சில் திரும்ப பெற வேண்டும், போலி வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களை நீக்கவும் தமிழகத்தில் தமிழ் தெரிந்த வழக்கறிஞர்களை மட்டுமே கீழமை நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.