300-மாணாக்களுக்கு தரமான ஸ்வீட் தந்த ஆசிரியை! வாழ்த்திய பெற்றோர்!

ப.சீனிவாசன்,
பள்ளிக் குழந்தைகள் தங்கள் பிறந்த நாளில் இனிப்பு காரம் கொடுத்து ஆசிரியர் & ஆசிரியைகளிடம் வாழ்த்து பெறுவது சாதாரண சம்பவம்,
ஆனால் வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரி, வா.ஊ.சி நகரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.தரணிபாய் என்பவர் சற்றே வித்தியாசமாக செயல்பட்டிருக்கிறார்.
அது என்னவென்று பார்ப்போம்,
மேற்படி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் கடந்த செவ்வாய் கிழமையன்று தங்கள் கைகளில் இனிப்பு மற்றும் காரம் பாக்கெட்டுகளுடன் பள்ளிக்கு சென்றனர்.
விசாரித்த போது அவர்கள் - எங்க டீச்சர் பர்த் டே எங்க எல்லோருக்கும் ஸ்வீட் காரம் குடுத்தாங்க என்று ரொம்ப சந்தோஷமா சொன்னார்கள், அந்த பள்ளியில் படிக்கும் சுமார் 300 மாணவ மாணவியர்களிடமும் ஒரே மாதிரியான இனிப்பு காரம் பாக்கெட்டுகள் மின்னியது.
அவற்றை லோக்கல் கடைகளில் வாங்காமல், பாம்பே ஆனந்த பவனில் வாங்கியிருந்தார் அந்த ஆசிரியை.
ஆசிரியை எஸ்.தரணிபாயை வா.ஊ.சி நகர் பெற்றோர் மனதார வாழ்த்தினர்.