படுத்துக் கொண்ட பீன்ஸ்:- பலலட்சம் நஷ்டம்!

ஜி.கே.சேகரன்
ஏலகிரி மலையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் கொடி பீன்ஸ் தோட்டம் நாசம். லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்தால் விவசாயி வேதனை.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரிமலை அத்தனாவூர் அடுத்த மங்களம் பகுதியில் வசிப்பவர் கோவிந்தசாமி.அதே பகுதியில் இவருக்கு சொந்தமான நிலத்தில் கொடி பீன்ஸ் விவசாயம் செய்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் கோவிந்தசாமி போட்டிருந்த கொடி பீன்ஸ் தோட்டம் முழுவதும் நாசம் அடைந்தது.
தற்போது தரையில் விழுந்து நாசமாக்கி உள்ள பீன்சை வியாபாரத்திற்கு எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தனக்கு அரசு சார்பாக ஏதாவது நிவாரணம் கிடைத்தால் அடுத்து வருகின்ற காலங்களில் தொடர்ந்து தன்னால் விவசாயம் செய்ய முடியும் எனவும் நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்றும் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் அவல நிலைக்கு உடனடியாக அரசின் மூலம் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது