கால்நடை கிளை மருத்துவமனை வேண்டும் என திமுக எம்.எல்.ஏ.கோரிக்கை!

ஜி.கே.சேகரன்,
கணியம்பாடி அருகேயுள்ள மலைகிராமமான நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் - கால்நடை கிளை மருத்துவமனை ஒன்றை அமைக்க ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் விழாவில் கோரிக்கை
வேலூர்மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ் அரசம்பட்டு கிராமம் அருகேயுள்ள மலைகிராமமான நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆவின் கூட்டுறவுத்துறை மற்றும் கால்நடைத்துறை இணைந்து சிறப்பு கால்நடை மருத்துவமுகாமானது நடந்தது.
இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் துவங்கி வைத்து பசுக்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை அளித்தார்.
இவ்விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் மற்றும் கணியம்பாடி ஒன்றிய துணைதலைவர் கஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் நதியா புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் 200-க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் விலையில்லா தீவனங்கள் சத்து உப்பு கரைகள் மேலும் கால்நடை சிறப்பாக பராமரித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் பேசுகையில் இந்த மலை கிராமத்தை சுற்றி ஆயிரக்கணக்கான பசுக்கள் ஆடுகள் கோழிகளை விவசாயிகள் வளர்த்து தொழில் செய்து வருகின்றனர், ஆகவே மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அதனை ஏற்று இங்கு ஒரு கிளை கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமென பேசினார்.
இதில் கால்நடைதுறை துணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன், கூடுதல் இயக்குநர் அந்துவன் உள்ளிட்டோரும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.