அடமானம்  வைத்தது மூன்று சவரம்-கேட்பது ஏழு சவரன்:-அலுவலர் குளறுபடியால் காமெடி!

அடமானம்  வைத்தது மூன்று சவரம்-கேட்பது ஏழு சவரன்:-அலுவலர் குளறுபடியால் காமெடி!

  கு.அசோக்,

  கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிகாரிகள் குளறுபடியால் நகை அடமானம் வைத்த விவசாயிக்கு நகைகடன் தள்ளுபடி ஆகவில்லை,   ஆதார் எண் மோசடி செய்த அதிகாரிகளின் குளறுபடியால் மக்கள் அதிர்ச்சி.

 இராணிப்பேட்டைமாவட்டம், லாலாப்பேட்டையில் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது இந்த சங்கத்தில் தமிழக அரசு அறிவிப்பின் படி 5 சவரனுக்கும் கீழா நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் லாலாப்பேட்டையை சேர்ந்த விவசாயி மோகன் என்பவர் 3 சவரன் நகையை அடமானம் வைத்துள்ளார்.

 இருப்பினும், வங்கி அதிகாரிகள் அவர் 7 சவரன் நகையை அடமானம் வைத்த்தாக மோகனுக்கு கடன் தள்ளுபடி கிடையாது என அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

 இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்,வங்கிக்கு சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 அப்போது அதிகாரிகள் ஆதார் கார்டு எண்ணை இணைப்பதில் குளறுபடி நடந்ததாகவும், மோகனின் ஆதார் எண்ணை எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு பெயரில் இணைத்ததாகவும் தெரிவித்தனர்.

 விவசாயி மோகன் தான் அடமானம் வைத்தது 3 சவரன் நகைகள் ஆனால் குளறுபடியின் காரணமாக 7 சவரன் நகைகள் அடமானம் வைத்ததாக கூறியுள்ளீர்கள் எனவே மீதமுள்ள நகையை தான் பணம் கட்டி மீட்டு செல்வதாக கூறியதால் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

 பின்னர் தங்களின் தவறை உணர்ந்த அதிகாரிகள் மோகனுக்கு கடன் தள்ளுபடி வழங்கி நகையை ஒப்படைப்பதாக உறுதியளித்தனர் இந்த லாலாப்பேட்டை கூட்டுறவு கடன் வங்கியில் அதிகாரிகள் குளறுபடியால் இது போல் தவறுகள் நடப்பதால் அதிக அளவில் விவசாயிகள் கடன் தள்ளுபடியை பெறமுடியாமல் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.