13 வயது வெள்ளை பெண் புலி பரிதாப சாவு!
தாம்பரம் முரளிதரன்,
வண்டலூர் உயிரியல் பூங்காவில் முடக்குவாதத்தால் சிகிச்சை பெற்று வந்த 13 வயது பெண் வெள்ளை புலி பரிதாபமாக இறந்தது. சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி,யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் கொரோனா பாதிப்பால் சிங்கம், புலி உள்ளிட்ட பல விலங்குகள் அடுத்தடுத்து இறந்து வந்தன. இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த 13 வயது ஆகான்ஷா என்ற வெள்ளை பெண் புலி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
இதில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு நான்கு கால்களும் முடங்கி போன நிலையில் படுத்த படுக்கையாக இருந்த பெண் வெள்ளைப் புலிக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சைஅளித்து வந்தனர்.
ஆனால் நேற்று இரவு 9 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
இறந்த பெண் வெள்ளை புலிக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பூங்கா நிர்வாகத்தினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இறந்த பெண் வெள்ளை புள்ளியை மேற்படி பூங்கா மருத்துவனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று காலை அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி இறந்த சம்பவம் பூங்காவில் உள்ள ஊழியர்கள் அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.