காயம் பட்ட மாணவர்களை பள்ளியருகே விட்டு எஸ்கேப் ஆன டிரைவர் - கண்டக்டர்! கருணையோடு நேரில் பார்த்த கலெக்டர்!

  ம.பா.கெஜராஜ்,

  பேருந்து தள்ளுமுள்ளுவில் மாணவர்கள் காயம் பட்டனர். அப்படியிருக்க அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பள்ளியில் இறக்கிவிட்ட  அரசு டிரைவரும் - கண்டக்டரும் கடமையாற்ற எஸ்கேப் ஆகிவிட்டனர். விவரம் அறிந்த ஆட்சியர் மாணவர்களை நேரில் பார்த்து ஆறுதல் சொன்னார்.

 இன்று (24.03.2022) காலை 9.00 மணியளவில் காவனூரிலிருந்து வேலூரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் பாலமதி, அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் பள்ளிக்கு வந்துக் கொண்டிருந்தனர்.

   அப்போது பள்ளிக்கு 1 1/2 கிலோ மீட்டருக்கு அருகாமையிலுள்ள சிக்காமேடு என்னும் பகுதியில் உள்ள வளைவில் பேருந்து திரும்பும் போது எதிரே வந்த மற்றொரு பேருந்தில் மோதாமல் இருக்க இப்பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்த முயற்சித்தார்.

   அப்போது பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 15 பேர் பேருந்துக்குள் முந்தி தள்ளப்பட்டு விழுந்தனர்.

  பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இம்மாணவர்களை பள்ளி வாசலில் இறக்கிவிட்டு சென்று விட்டனர்.

  அருகில் இருந்த பெற்றோர்கள், ஊராட்சி மன்ற தலைவர், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் மாணவர்கள் உடல் வலியுடன் முறையிட்டனர்.

  இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் மாணவர்களை வேறொரு பேருந்தில் ஏற்றிக் கொண்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

   இந்நிகழ்வு சார்ந்து பொதுமக்கள் மற்றும் தலைமை ஆசிரியரால் விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

   அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களின் நிலைமையை கேட்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கியதின்பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வின் போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முதல்வர் மரு.செல்வி, முதன்மை கல்வி அலுவலர் திரு.க.முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

காசநோய் ஒழிப்பு ஆட்சியர்  -அலுவலர் உறுதிமொழி

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் உலக காசநோய் தினமான இன்று (24.03.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்களும் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்று  கொண்டனர். தொடர்ந்து காசநோய் ஒழிப்பு  மாபெரும் கையெழுத்து பிரச்சாரத்தில் கையொப்பமிட்டு  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

 வேலூர் மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தை கவனமுடன், திறம்பட வேலூர் மாவட்ட மருத்துவர்கள் செயல்படுத்தி வருகின்றனர். வேலூர்  மாவட்டத்தில் ஒரு இலட்சம் மக்கள்தொகைக்கு 165 நபர்களுக்கு காசநோய் உள்ளது என புள்ளிவிவரத்தை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  காசநோயை குறைப்பதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

  காசநோய் பாக்டீரியா மூலம் பரவி வருகின்றது. இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல் ஏற்பட்டால் அவற்றை எளிதாக எடுத்து கொள்ள வேண்டாம்.

  உடனடியாக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதனை செய்யும் போது காசநோய்  அறிகுறி இருந்தால் மருத்துவர்கள் அதற்குண்டான  மருத்துவத்தை  பரிந்துரை  செய்வார்கள்.  காசநோய் பாதிப்புற்றவர்கள்  மருத்துவரின் பரிந்துரையை பின்பற்றி ஓய்வு எடுக்க வேண்டும்.          காசநோய் ஒழிப்பு என்பது வேலூர் மாவட்டத்தில் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 165 நபர்கள் என்பது 100க்கும் கீழ் கொண்டு வர நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  இணை இயக்குநர்  (மருத்துவ  பணிகள்) மரு.கண்ணகி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பானுமதி, மாநகர நல அலுவலர் மரு.மணிவண்ணன், துணை இயக்குநர் (காசநோய்) மரு.  ஜெயஸ்ரீ, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முதல்வர். மரு.செல்வி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளனர்.