பைப்லைன் உடைந்து சாலையில் ஓடும் குடிநீர்!

பைப்லைன் உடைந்து சாலையில் ஓடும் குடிநீர்!

கு.அசோக்,

 இராணிப்பேட்டை அருகே குடி தண்ணீர் பைப்லைன் உடைந்து சாலையில் வீணாக போகும் அவலம் -  உடனடியாக சரிசெய்து தர வேண்டுமென பொதுமக்கள்  கோரிக்கை

  இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்  மூலமாக பல்வேறு இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பூமியில் ராட்சத பைப் லைனை புதைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆட்டோ நகர் பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பூமியில் புதைக்கப்பட்டுள்ள ராட்சத குடிதண்ணீர் பைப் லைன் திடீரென உடைப்பு ஏற்பட்டு பூமியிலிருந்து மலமலவென தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கின்றது.

   இதன் காரணமாக இந்த பகுதியில் நீண்ட நேரமாக தண்ணீர் வீணாகி சாலையில் வழிந்தோடி வருவதால் சம்பந்தப்பட்ட துரை சார்ந்த அதிகாரிகள் இதில் முழுவதுமாக அதில் கவனம் செலுத்தி தண்ணீர் வீணாகி வெளியேறிக் கொண்டிருக்கும் ராட்சச பைப் லைனை சரி செய்து மக்கள் குடிநீருக்காக தினம் தினம் அல்லாடி வரும் வேளையில் இது போன்ற நிலை வரக்கூடாது என்றும் உடைந்த பைப் லைனை உடனடியாக சரி செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கையாகவே முன்வைக்கின்றனர்.

  மேலும் உடைந்திருக்கும் பைப் லைன் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருப்பதால் ஏந்த நேரத்திலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.