பொன்னை அனைக்கட்டுக்கு விமோச்சனம் தந்த கலெக்டர்!

பொன்னை அனைக்கட்டுக்கு விமோச்சனம் தந்த கலெக்டர்!

பொன்னை அனைக்கட்டுக்கு விமோச்சனம் தந்த கலெக்டர்!

 ஜி.கே.சேகரன்,

  சோழர்காலத்தில் கட்டப்பட்டு ஆங்கிலேயர்களால் பராமரிக்கப்பட்டு வந்த பொன்னை  அனைக்கட்டு மதகுகள்  உடைந்ததை சீரமைப்பது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

 வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள பொன்னை அனைக்கட்டு சோழர் காலத்தில் கற்களால் உருவாக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயர்களால் 1854ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டது.  இந்த நிலையில் நிவர் புயல் மற்றும் புரெவி புயலின் காரணமாக தொடர்ந்து பொன்னை அனைக்கட்டில் அதிக அளவு தண்ணீர் வந்தது. இதனால் மதகின் இரும்பு கதவுகள் முழுவதுமாக நீரில் அடித்து செல்லப்பட்டு நீர் வெளியேறியது.

 இதுகுறித்து அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்தனர் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தொடர்ந்து  மதகுகளின் கண்களிலும் உடைப்பு ஏற்பட்டு நீரானது சேமிக்க முடியாமல் பல லட்சம் லிட்டர் நீர் வீணாக வெளியேறியது.

 அதைத்தவிர, அணைக்கட்டின் கண்களும் மதகுகளும் முழுவதும் உடைந்துள்ளது இதனை சீரமைப்பது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.நேரில் சென்று அணைக்கட்டை ஆய்வு செய்தார்.

 இந்த அணைக்கட்டு சீரமைக்கப்பட்டால் மழைகாலங்களில் பொன்னை அணைக்கட்டில் நீரை சேமித்தால் மக்களின் குடிநீர் பஞ்சம் நீங்கும் விவசாய விளைநிலங்களும் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.