குத்துவிளக்கேற்றிய ஆட்சியர்!

குத்துவிளக்கேற்றிய ஆட்சியர்!

 ஜி.கே.சேகரன்,

 வேலூர் அரசு பொறியியல் கல்லூரி சுமார் 8. 45 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்தை ஆட்சியர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தா£

 வேலூர்மாவட்டம், தொரப்பாடியில் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இதில் பயிலும் மாணவர்களுக்கு 8. 45 கோடி மதிப்பீட்டில் புதியதாக மாணவர் தங்கும் விடுதி கட்டப்பட்டது. மாணவர்கள் தங்கும் வகையில்  சுமார் 51 அறைகள், சமையல் அறை, அலுவலக அறை உள்ளிட்ட வசதியுடன் கூடிய விடுதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

  இதனை அடுத்து வேலூரில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் விடுதியை குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஸ்ரீராம் பாபு உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.