சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா  சிறப்பு போட்டி!

சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா  சிறப்பு போட்டி!

பா.சுரேஷ்,

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த, கூடுவாஞ்சேரி அருள் நகரில் உள்ள நீலன் பள்ளியில் மாவட்ட அளவிலான யோகா  சிறப்பு போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது, நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட அருள் நகரில் நீலன் பள்ளியில் இப்போட்டிக்கு செங்கல்பட்டு மாவட்ட யோகாசனம் சங்க நிறுவனர் அய்யா யோகி ராமலிங்கம்  கலந்துகொண்டு தலைமை தாங்கினார், நீலன் பள்ளி தாளாளர் நீலன் அரசு முன்னிலையில் வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக செங்கல்பட்டு மாவட்ட அரிமா சங்கத்தின் நிர்வாகி மதியழகன், அம்சவல்லி, கலந்து கொண்டனர்.

இதில் 5 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசினை வென்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு,தனியார் பள்ளி மாணவர்கள்

மற்றும் சமூக நல ஆர்வலர்கள் என  சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியை அரிமா சங்க நிர்வாகி தமிழ் செல்வம் தொகுத்து வழங்கினார்.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த யோகா போட்டியில் மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.