நெடுஞ்சாலை துறையினர் அடாவடி.! தனியார் கல்வி நிறுவனத்தில் கையூட்டா?

நெடுஞ்சாலை துறையினர் அடாவடி.! தனியார் கல்வி நிறுவனத்தில் கையூட்டா?

  பா.சுரேஷ்,

  ஆத்தூர் ஊராட்சியில்,  நெடுஞ்சாலைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அந்த இடத்தை காப்பாற்றும் நோக்க்கத்தில், அரசு நடுநிலைப் பள்ளியின் நிலத்தை கையகப்படுத்தும் கன்னியமில்லாத அதிகாரிகளை பொதுமக்கள் கண்டித்திருக்கிறார்கள்.

 செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய ஆத்தூர் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

தற்போது செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடந்துவருகிறது. இந்த பணிக்கு ஏற்கனவே அளவு எடுத்து சாலை ஓரத்தில் வடிகால் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

தற்போது கட்டப்பட்ட கால்வாயிலிருந்து சுமார் 15 மீட்டர்  இடத்தை தனியார் கல்வி நிறுவன வசதிக்காக காலியாக வைத்துவிட்டு அரசு நடுநிலைப்பள்ளியின் பெரும்பகுதி நிலத்தை நெடுஞ்சாலை துறை சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கிறார்கள்.

  மேலும் உயர்மின் அழுத்த (11 கிவா ) இரும்பு மின் கம்பங்கள் பள்ளியின் அருகில் பதித்து அதில் மின் கம்பிகள் அமைத்து விட்டார்கள்.இதனால் மழைக்காலங்களில் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

இது சம்மந்தமாக சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் சாலையை மாற்றி அமைக்க சொன்னால் அவர்கள் முடியாது . இப்படித்தான் செய்வோம் என்று அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்.

 இங்கு பேருந்து நிலையம் அமைக்க போவதாகவும், பள்ளியின் நுழைவாயிளில் பேருந்து நிலையம் அமைந்தால் பள்ளி பிள்ளைகளுக்கு மிகவும் இடஞ்சளாக இருப்பதோடு சாலை விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே ஏற்கனவே அளவு எடுத்து கால்வாய் கட்டிய இடத்திலிருந்து ரோடு அமைத்து மின் கம்பங்களை மாற்றி அமைத்தால் பள்ளிக்கு இடம் அதிகரிக்கும் பள்ளி மாணவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாத நிலை ஏற்படும்.

 பள்ளி மாணவர்களின் நலன் கருதி உடனடியாக சாலையை மாற்றி அமைக்க பகுதிவாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.