பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்த S.P.க்கள்!

த.நெல்சன்,
வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களிலுள்ள கண்காணிப்பாளர் அலுவலகங்களில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அதில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.
அதே போல் இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V. கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 23 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.