மாவட்ட மேலாளர் இல்லாமல் தள்ளாடும் தேனி டாஸ்மாக்!

மாவட்ட மேலாளர் இல்லாமல் தள்ளாடும் தேனி டாஸ்மாக்!

 எம்.ரபிக் ராஜா,

  மாவட்ட மேலாளர் இல்லாமல் தேனி டாஸ்மாக் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

தேனி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது.

 இங்குள்ள குடவுன்களில் இருந்து மாவட்டத்தில் இயங்கக்கூடிய 96 டாஸ்மாக் கடைகளுக்கும், தனியார் மதுபானக் கூடங்களுக்கும் விற்பனைக்காக மதுபானங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

  இங்கு பல மாதங்களுக்கும் மேலாக (DM) மாவட்ட மேலாளர் பதவி காலியாகவே உள்ளது.

  உதவி மேலாளரை கொண்டு இயங்கி வரும் நிர்வாகத்தால் அலுவலகப் பணி உள்ளிட்ட பணிகள் பாதிப்படைந்த வண்ணம் உள்ளன.

   மேலும் மாவட்ட மேலாளர் இல்லாததால் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்து வருகின்றன.

  கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளுவதில்லை. விற்பனையாளர்களை கண்டு கொள்வதில்லை.அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

  மாவட்ட நிர்வாகம் தலையீடு செய்து அரசிற்கு அதிக அளவில் வருமானத்தை ஏற்படுத்தித் தரும் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாவட்ட மேலாளர் காலிப் பணியிடத்தை நிரப்பி முறைகேடுகளை தடுத்திட வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.