இரண்டு நாட்களில் ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு!

கு.அசோக்,
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மக்களிடம் குறை கேட்க்கப்பட்டது.
வேலூர்மாவட்டம், காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்மி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, காட்பாடி வட்டாச்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேசுகையில் இரண்டு நாட்களில் அனைத்து இசேவை மையம், தொடக்க வேளாண்மை மையம், பள்ளிகள், கல்லூரி, விடுதிகள், ரேஷன் கடை ஆகிய அனைத்து அரசு இடங்களையும் அலுவலர்கள் நீங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்களும் உங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களிடம் மக்கள் என்னென்ன குறைகளை கூறியுள்ளனர் என கேட்டறிந்து அவைகள் குறித்து ஆய்வு செய்து குறைகளை போக்க வேண்டுமென பேசினார்.