சீக்கிரமாக வேலையை முடிங்க! ஆட்சியர் உத்தரவு!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒவ்வொறு கட்டிடமாக சென்று பார்வையிட்ட அவர் சிலபல வேலைகளை திருத்தி செய்யுமாறும், குறித்த கால அவகாசத்துக்குள் பணிகளை முடித்துக் கொடுக்குமாறும் அறிவுறுத்தியதோடு, அது குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் ஆட்சியர்குடியாத்தம் வட்டம் கே. எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு எனும் நிகழ்ச்சியில் கலந்துரையாடலில் சிறப்பாக வினாக்களை எழுப்பிய மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் திரளான கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் பங்கேற்றனர் இக்கூட்டத்தில் தமிழின் சிறப்புகள் மாண்புகள் குறித்தும் மாணவ,மாணவிகளுக்கு விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாடலாசிரியர் திரு.யுகபாரதி, ஊடகவியலாளர் திரு. செந்தில்வேல், மண்டல இணை இயக்குனர் கல்லூரி (கல்வி) முனைவர்.காவேரி அம்மாள் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு.வெங்கட்ராமன், ஆதி திராவிட நல அலுவலர் திரு.இராமச்சந்திரன், துணை ஆட்சியர் ( பயிற்சி) திருமதி.பிரியா , கல்லூரி முதல்வர் திரு.செந்தில்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.03.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.