கல்லூரி முதல்வரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

R.N.Anandan,
நந்தனம் கல்லூரி முதல்வரை கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டியில் உள்ள நந்தனம் கல்லூரியில் 57 மாணவ,மாணவிகள் டி.பார்ம் பிரிவில் படித்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை முழுமையாக கட்டி விட்டு நிலையில் நாளை மறுநாள் வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் நடக்கும் தேர்வில் தேர்வு எழுத இருக்கும் நிலையில் இரண்டாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை முழுமையாக கட்டினால் மட்டுமே ஹால் டிக்கெட் கொடுக்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரியில் கல்லூரி முதல்வரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர், இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.