மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்துக்கு தொலைபேசி எண்களை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட்டார்!!

ஆர்.ரமேஷ்,
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளுமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன், இ.ஆப, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பதிவு செய்தல், கண்காணித்தல் மற்றும் திட்டம் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கு மாவட்ட இலவச அரசு தொலைபேசி எண்:1077 மற்றும் 04179 222111 ஆகிய இரண்டு தொலைபேசி எண்கள் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கட்டுப்பாட்டு அறையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கோரும் தகவல்களை வழங்கிடும் பொருட்டு உரிய பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் பதிவுசெய்தல், முகாம் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட திட்டம் தொடர்பான தகவல்களை மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மாவட்ட இலவச அரசு தொலைபேசி எண்.1077 மற்றும் 04179 222111 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளுமாறும்,
மேலும் வட்ட அளவில்,
- வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் - 04179 220091
- வட்டாட்சியர் அலுவலகம், வாணியம்பாடி - 04174 232184
- வட்டாட்சியர் அலுவலகம், நாட்றம்பள்ளி ௹ 04179 242499
- வட்டாட்சியர் அலுவலகம், ஆம்பூர் - 04174 244255
ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளுமாறும், அரசு விதிமுறைகளின்படி தகுதியானவர்கள் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.