நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை ஆட்சியர் பார்வை!

த.நெல்சன்,
பேர்னாம்பட்டு அருகே கட்டப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், பத்தலப்பல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து கட்டிடங்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலு விஜயன், பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் திருமதி.சித்ரா ஜனார்த்தனன், ஒன்றிய குழு துணை தலைவர் திருமதி.லலிதா, பேர்ணாம்பட்டு நகராட்சி துணை தலைவர் திரு.ஆலியர் ஜூபேர் அகமது, குடியாத்தம் வட்டாட்சியர் திரு.வெங்கட்ராமன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் திருமதி.கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.