வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த ரேஷன் அரிசி பறிமுதல்!

கு.அசோக்,
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, ஜங்காலபுரம் அருகே, வெளிமாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்திய நாட்றம்பள்ளி, ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்த சூர்யா, சந்தோஷ், சின்னராசு ஆகியோரை போலிசார் வலை வீசி தேடி வரும் நிலையில், அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.