எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!

எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!

ஜி.கே.சேகரன்,

 ஆம்பூர் அருகே சமையல் எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தோட்டாளம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோல்டு வின்னர் சமையல் எண்ணெய் ஏற்றி வந்த லாரி டயர் வெடித்தது.  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவர் மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பங்களில் மோதியது.

 பின்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், லாரி கிளீனர் லாரிக்கு அடியில் சிக்கி¢ சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விசாரணையில் அவர் ஆற்காடு, பாலாஜி நகர் கன்னி கோவில் தெவைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது.

 மேலும்  லாரி ஓட்டுநர் பாலாஜி மற்றும் சீனிவாசன் உட்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்திருந்த நிலையில் அருகாமையில் உள்ள பொதுமக்கள் அவர்களை மீட்டு மாதனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.