விதிமீறி வாகனத்தை ஓட்டியவரை மடக்கிய போலிசார்! மிரட்டப்பட்டதால் மக்கள் சூழந்தனர்!

கு.அசோக்,
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் சிக்னலில் நிற்காமல் சென்ற 407 ஓட்டுனர் மடக்கிய காட்பாடி போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள்-ஓட்டுனருக்கும் காவலர்களுக்கும் வாக்குவாதம் பொதுமக்கள் சூழ்ந்ததால் பரபரப்பு.
வேலூர் மாவட்டம், காட்பாடி, சித்தூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை காட்பாடி போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கன்னியப்பன் மற்றும் மேகநாதன் ஆகியோர் பீக்டைம் நேரத்தில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேலூர் அடுத்த பென்னாத்தூரை சேர்ந்த சதீஷ் என்பவர் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சிக்னலை மீறி 407 வாகனத்தில் சென்றதாக போக்குவரத்து காவல்துறையினர் வண்டியை மடக்கி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனா.
¢ அப்பொழுது ஓட்டுனருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கும் கடும் வாக்குவாதம் நிலவியது. இதில் பேருந்து ஓட்டுனர் சதீஷ் தன்னை காட்பாடி போக்குவரத்து காவல் உதவியாளர் கன்னியப்பன் தாக்கினார் என குற்றச்சாட்டை வைத்து தனது மொபைலில் தொடர்ந்து வீடியோ எடுக்க தொடங்கினார்
¢ இதனை அடுத்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் திடீரென சூழ்ந்ததால் காட்பாடி திருவலம் சாலை, வேலூர்-சித்தூர் மெயின் ரோடு, ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வன் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தொடர்ந்து காட்பாடி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்
மேலும் இச்சம்பவத்தால் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
பிரச்சனைக்குரிய ஓட்டுநர் சதீஷ் பிரியா ராம்கோ அல்ட்ராடெக் சிமெண்ட் என்ற நிறுவனத்தில் 407 ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.