பிஷப் தலைமையில் கிறிஸ்தவர்கள் அமைதிக் கூட்டம்! கொட்டும் மழையில் நடந்தது!!

ஜி.கே.சேகரன்,
தென்னிந்திய திருச்சபை, (சி.எஸ்.ஐ.) கிறிஸ்தவர்கள் மணிப்பூர் மாநில மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் அமைதி அஞ்சலி கூட்டமானது நடந்தது.வேலூர் ¢மாவட்டம், வேலூரில், அண்ணாகலையரங்கம் அருகில், தென்னிந்திய திருச்சபை சார்பில் வேலூர் பேராயத்தின் பேராயர் எச்.சர்மா நிதியானந்தம் தலைமையில் கிறிஸ்தவ மக்கள் அமைதி கூட்டம் நடத்தினர்.
மணிப்பூர் மாநிலத்தில் அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பையும் பராமரிப்பையும் வலியுறுத்தியும் அடிப்படை உரிமைகளான உணவு உடை இருப்பிடம் தகவல் தொடர்பு இழந்து தவிக்கும் மக்களுக்கு அனைத்து பிரிவு மக்களுக்கும் மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசும் நம்பிக்கை மிக்க வாழ்வை அவர்களுக்கு அமைதியான முறையில் ஏற்படுத்தி தர கோரி இந்த அமைதி அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஓரளவுக்கு செய்யப்பட்டிருந்த நிலையில் மழை கொட்டியது. இருப்பினும் கொட்டு மழையிலும் சி.எஸ். ஐ கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்
மணிப்பூரில் கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் அங்கும் இனம் சாதி மொழிகளை மறந்து அனைவருக்கும் மத்திய மாநில அரசுகள் உதவிட கோரி இந்த அமைதி அஞ்சலி கூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.