ஆட்டோ தொழிலாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட கலெக்டர்!

ஆட்டோ தொழிலாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட கலெக்டர்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  வேலூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.

  இவர் மே 1- தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வேலூரில் முக்கிய வீதிகளில் ஆட்டோ தொழிலாளர்கள் நடத்திய ஊர்வலத்தில் பங்கேற்றார். அவருடன் தொழிற் சங்கவாதியான அப்புபால் பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  அதன் பின்னர் காட்பாடி ஊராட்சி ஒன்றிக்குழுவுக்குட்பட்ட கரிகிரி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

  அப்போது தொழிலாளர்கள் மத்தியில் உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது,

தொடர்ச்சியாக ரூ.4.35 கோடி மதிப்பிலான சாலைகள் அமைக்கும் பணிதனை கலெக்டர் அவர்கள் துவக்கிவைத்தார்.