சிறப்பாக நடந்த ஜலகண்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்! சக்தி அம்மா பங்கேற்பு! போலிசார் மீது பக்தர்கள் அதிருப்தி!

ஜி.கே.சேகரன்,
வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலய 4 ஆவது மஹா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர் - அயோத்திய ராமர் கோவிலுக்கு வழிகாட்டியாக அமைந்த மக்கள் புரட்சி மூலம் லிங்கம் பிரதிஷ்டை செய்த இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்தது, சிறப்பாக நடந்த கும்பாபிஷேகத்தில் சக்தி அம்மா பங்கேற்றார், இந்நிலையில் போலிசார் மீது பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் தொல் பொருள்துறையின் கட்டுபாட்டில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மக்கள் புரட்சி மூலம் 1981 ஆம் ஆண்டு 400 ஆண்டுகள் சாமி இல்லாத கோவிலாக இருந்தது.
இந்த நிலையை மாற்றிய நிலையில் அங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட்டது.
அதன் முதல் 1982 ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், ஏற்பட்ட மக்கள் புரட்சி தான் அயோத்தி ராமர் கோவிலுக்கு வழிகாட்டியாக அமைந்தது.
இதன் 4 ஆவது மஹா கும்பாபிஷேகம் நேற்று கடந்த 21 ஆம் தேதி துவங்கி மூன்று கால யாகபூஜைகளுடன் 1120 சிறிய கலசங்களும் 170 பெரிய கலசங்களும் யாகசாலையில் வைக்கப்பட்டு 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அனைத்து கோபுர கலசங்கள் அம்மன் மற்றும் பெரிய கொடிமரங்கள் அனைத்தும் தங்க தகட்டில் உருவாக்கப்பட்டு, மூலவரான ஜலகண்டீஸ்வரருக்கு ஸ்வர்ன பந்தனம் செய்யப்பட்டது.
யாக சாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் மேள்தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
ராஜ கோபுரம் சிறிய கோபுரம் மூலவர் கோபுரம் விநாயகர் கோபுரம் ஆகியவைகளுக்கு புனிதநீரானது ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது செய்யப்பட்டது.
இந்த மஹா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கத்துடன் சாமிதரிசனம் செய்தனர் மக்கள் அதிகம் கூடியதால் பாதுகாப்பு பணியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தபட்டனர்.
இதில் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா, கலவை சச்சிதானந்த சுவாமிகள், மகாதேவமலை மகானந்த சித்தர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் காவல்துறையினர் சரியான ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் இரண்டு மணி நேரம் போராடி கோட்டையிலிருந்து வெளியே வந்தனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, மேலும் காவல்துறையினர் பக்தர் ஒருவரை தாக்கியதால் அவர் கலசம் புறப்பட்டு வரும் நேரத்தில் கோவிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அவரை அடித்து வெளியேற்றினார்கள்.