.சோபா கடையில் தீவிபத்து ரூ.50 லட்சம் மதிப்பில் சேதம்!

.சோபா கடையில் தீவிபத்து ரூ.50 லட்சம் மதிப்பில் சேதம்!

 கு.அசோக்,

  வேலூரில் மரபட்டறை மர பீரோ சோபா தயாரிக்கும் கடையில் தீவிபத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது

  வேலூர்மாவட்டம், வேலூர் சாய்நாதபுரத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான மர பீரோ மற்றும் சோபா தயாரிக்கும் கடை உள்ளது இதே போன்று சுரேஷ் என்பவரின் மரப்பட்டறையும் அருகிலுள்ளது.

   இன்று அதிகாலையில் தீபற்றி இரண்டுகடைகளிலும் தீ பரவி மளமளவென தீ எரிந்து.

 இதுகுறித்து வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.

 இருப்பினும் இந்த தீவிபத்தில் இரண்டு கடைகளிலும் சேர்த்து  ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.