கனிமவள கொள்ளைக்கு துணை போன நாகர்கோவில் ஆர்.டி.ஓ.! லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை! பல லட்சம் பறிமுதல்?

கனிமவள கொள்ளைக்கு துணை போன நாகர்கோவில் ஆர்.டி.ஓ.! லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை! பல லட்சம் பறிமுதல்?

குமரேசன்,

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம், தோவாளை அருகே செயல்பட்டு வருகிறது.

 இன்று 30/09/2021 மாலை அங்கு குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி.பீட்டர் பால் தலைமையில் திடீர் சோதனை நடத்தி மேற்கொண்டனர்.

 இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  மேற்படி வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடர்புடைய பகுதிகள் வழியாக கனிம கொள்ளையர்கள் சுலபமாக பயணிக்க பலகட்டங்களில் லஞ்சம் கொடுப்பதாக புகார்கள் எழுந்தன.

 குறிப்பாக லாரி பாடியை விதிமுறைகளுக்கு மாறாக உயர்த்தி கனிமவளத்தை வாரி சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை கண்டு கொள்ளாமல் இருக்க லட்சங்களில் மாமுல் புரள்கிறது.

 இது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த சோதனையில் பல லட்சத்துக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இதேபோல் வேலூர் உட்பட தமிழகமெங்கும் ரைடு  நடந்தது.