பெண் கடத்தல் புகார்:- வழக்கறிஞரின் வாக்கு மூலம்! சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி தப்பி ஓட்டம்!

  பெண் கடத்தல் புகார்:- வழக்கறிஞரின் வாக்கு மூலம்! சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி தப்பி ஓட்டம்!

ம.பா.கெஜராஜ்,

 தேனியை சேர்ந்த பெண்ணினுடைய காதல் விவகாரத்தில் கடத்தல் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

  அப்படியிருக்க கேவிகுப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி இதற்கு உடந்தை என அவரது வழக்கறிஞர் போலீசில் வாக்கு மூலம் அளித்ததன் பேரில் ஜெகன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில் அவர் தப்பி ஓடி வட்டதாக கூறப்படுகிறது.

  வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் தனித்தொகுதியின் எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தியின் வீடு பூந்தமல்லி ஆண்டர்சன் பேட்டையில் உள்ளது. இன்று மதியம் திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையில் போலீசார்  சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஜெகன் மூர்த்தி வீட்டிற்கு சென்றனர்.

   இந்த தகவல் அறிந்து புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். இதனால் போலீசார் இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

  அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாத வகையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் அவர் தப்பியதாக சொல்லப்படுகிறது.

  தேனியைச் சேர்ந்த பெண் திருவாலங்காட்டைச் சேர்ந்த இனைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணின் தந்தை, தனது மகளை கடத்தியதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வழக்கறிஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

   அந்த வழக்கறிஞர், ஜெகன் மூர்த்தி கூறியதன் பேரின் அந்த பெண்ணை கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஆகவே போலீசார் பார்வைக்கு சென்றார் பூவை ஜெகன் மூர்த்தி.