பாசிட்டிவிட்டி.... நெகட்டிவிட்டி அதிகாரிகள்! அமைச்சர் எ.வ.வேலுவின் பரபரப்பு பேச்சு!

ஜி.கே.சேகரன்,
தமிழக முதல்வர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிவதை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிலை அலுவலர்களுடன் அமைச்சர் எவ. வேலு ஆய்வு கூட்டம் நடத்தினார் அதில் பாசிட்டிவிட்டி.... நெகட்டிவிட்டி அதிகாரிகள் என்று பரபரப்பாக பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 25ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிய உள்ள நிலையில் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பொதுப்பணித்துறை, தொழிற்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எவ.வேலு முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிவதன் காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எவ்வாறு செய்ய வேண்டும், மேலும் அனைத்து துறை சார்பில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
மொத்த நல திட்ட உதவிகளின் மதிப்பு என்ன, பயனாளிகளுக்கு எவ்வாறு தகவல் தெரிவித்து அவர்களை எவ்வாறு அழைத்து வர வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
மேலும் அமைச்சர் பேசுகையில் அதிகாரிகள் இரண்டு வகைப்படும் அதில் பாசிட்டிவாக யோசிப்பவர்கள் அனைத்திலும் தொலைநோக்கு பார்வையில் செயல்படுவார்கள் மற்றொருவர்கள் நெகட்டிவ்வாக யோசிப்பவர்கள் அவர்கள் ஏனோ தானாய் என வேலை செய்து செல்வார்கள், இதில் கையெழுத்து போடலாமா வேண்டாமா என்று தயங்குபவர்கள் என பேசினார்.
பின்பு வருவாய்த்துறை என்பது ஒரு முக்கிய துறையாகும் அதுதான் மக்களுக்கு நிரந்தரம் பட்டா வழங்குதல், ஜாதி சான்றிதழ் வழங்குதல், மூலம் மேற்படிப்பிற்கு செல்லவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் செயல்படும் துறை வருவாய் துறை எனக் குறிப்பிட்டார்.
பொன்னேரி பகுதியில் தமிழக முதல்வர் நலத்திட்டங்கள் வழங்கப்பட இருக்கும் இடத்தையும் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர்.