நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் குடியுரிமை! அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி!

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் குடியுரிமை! அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி!

கு.அசோக்,

   தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களுக்கு குடியுரிமை கேட்டதற்கு 10 மாதங்களில் நாடாளுமன்றதேர்தல் வரவுள்ளது அப்போது பார்க்கலாம் என அமைச்சர் ஐ,பெரியசாமி பேட்டி.

 வேலூர்மாவட்டம், அப்துல்லாபுரத்தில் இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசின் சார்பில் அரசே வீடு கட்டி குடியிருப்புகளை கட்டி தரும் திட்டத்தின் கட்டிடங்கள் கட்டபடுகின்றன.

 பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ,பெரியசாமி,அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்,ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்,மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

 பின்னர் வீடுகளை விரைவாக கட்டி பயனாளிகளுக்கு வழங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

  பின்னர் அமைச்சர் ஐ,பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டுமென கோருகிறார்கள்,  நாடாளுமன்றத்தேர்தல் இன்னும் 10 மாதத்தில் வரவுள்ளது அதன் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவிட்டு சென்றார்.