மும்பை போஸ்டர் போர்!

ஜார்ஜ்.ரவி,
மும்பை பாந்த்ரா கிழக்கில் உள்ள கலாநகர் சிக்னல் அருகே மறைந்த பாலாசாஹேப் தாக்கரேவின் பெரிய அளவிலான கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
வரவிருக்கும் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) தேர்தலில் முன்னாள் கூட்டணிக் கூட்டாளியான சிவசேனா (யுபிடி) உடனான தனது இறுக்கமான உறவை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ள பிஜேபி, மறைந்த பால்தாக்கரேவுக்கு தனது மரியாதையை வெளிப்படுத்தும் வாய்ப்பை அத்து ஒருபோதும் தவறவிடவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மும்பைக்கு வரும் வழியில் சிவசேனா நிறுவனர் பிரமாண்டமான கட் அவுட்டுகளை வைத்து இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பேனர்களை அவர்கள் தரப்பினர் வைத்து கவுன்டர் கொடுத்திருக்கிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் இடையா ராஜ்தாக்ரேவும் தன் தந்தையின் படத்துடன் தனது படத்தை பொறித்து மும்பை முழுக்க பளபளக்க வைத்திருக்கிறார்.