சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவை விட்டு வெளியேறினாரா!

சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவை விட்டு வெளியேறினாரா!

 ம.பா.கெஜராஜ்,

 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க. துணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

  மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனுக்கு பின்பு நீண்ட காலமாக துணை பொதுச்செயலாளர் பதவியில் அவர் இருந்து வரும் அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு, அவரை எதிர்த்து களம் இறங்கிய பா.ஜ.க.வை சேர்ந்த சரஸ்வதியிடம் தோற்று போனார்.

  வெறும் 206 வாக்கு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வியை தழுவினார்.

 தன்னை அமைச்சர் முத்துசாமி மற்றும் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 2 ஒன்றிய செயலாளர்கள் தான் தோற்கடிக்க வைத்தார்கள் காரணம் என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் குற்றம்சாட்டி வந்தார்.

 கூடவே மேற்படியானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி தலைமையிடம் புகார் செய்தார். ஆனால் தலைமை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 ஆனால் புகாருக்கு ஆளான 2 ஒன்றிய செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதேநேரத்தில் சுப்பு லட்சுமி ஜ்கதீசனின் ஆதரவாளர்களுக்கும் பதவி ஏதும் வழங்கப்படவில்லை.

 அதனைத் தொடர்ந்து தனக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கும் என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆசைபட்டார்.

 அதற்கும் தலைமை செவிசாயக்கவில்லை.

  ஆகவே கட்சி நிகழ்ச்சிகளை சுப்புலட்சுமி புறக்கணித்து வந்தார். ஆனால் கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் நடந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் பெருந்துறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்போது மட்டும் சுப்புலட்சுமி ஜெகதீசன் அதில் கலந்து கொண்டார்.

  பின்னர் கடந்த 15-ந்தேதி விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் பங்கேற்காமல் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அவரது கணவர் ஜெகதீசன் ஆகியோர் புறக்கணித்தனர்.

 அப்படியிருக்க சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமீபகாலமாக கட்சி தலைமைக்கு எதிராக அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இதற்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

 இந்நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

   இதன் உண்மைதன்மையை அறிய முற்பட்ட போது அவரது தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தலைமை கழகத்திலிருந்தும் எந்த தகவலும் இல்லை.

 இதனால் ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் மட்டும் அவரை சந்தித்து பேசி வருகிறார்கள்.

   இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் இன்று தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் விவகாரம் பற்றியும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.