சாலை மறியலை முறியடித்த  இராணிப்பேட்டை போலிசார்!

சாலை மறியலை முறியடித்த  இராணிப்பேட்டை போலிசார்!

கு.அசோக்,

  முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ஏஐடியுசி சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுக்கு எதிராக பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து  நிலையம் அருகே ஏஐடியுசி கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

  240 நாட்கள் பணிபுரிந்து இருந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு 21 ஆயிரம் குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.

 மேலும் மாத வருமானமாக குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாய் மற்ற பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.

 மேலும் நல வாரிய பணிகளை எளிமைப்படுத்தி தாமதம் இல்லாமல் நிதி பயன்களை உயர்த்தி வழங்குதல் கட்டுமான தொழிலாளர் இறந்து விட்டால் அவர்களுக்கு இறுதி சடங்கு நிதியினை அன்றே வாரிய அதிகாரி மூலமாக வழங்கிட வேண்டும்.

 பெண் தொழிலாளர்களுக்கு கட்டுமான தொழிலுக்கான நிர்ணயிக்கப்பட்டு வரும் குறைந்தபட்ச சட்ட கூலி நடைமுறைப்படுத்த வேண்டும்.

  மேலும் பீடி கட்டுமான தொழிலாளர்களின் நலனை முழுமையாக காத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

 அதே போல் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மாபெரும் கண்டன கோஷங்களை இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக எழுப்பப்பட்டது.

  பிறகு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்து கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் மத்திய  மாநில அரசுகளுக்கு எதிராக கைகளில் பதாகைகளை  ஏந்தியவாறு  கோஷங்கள் எழுப்பி பேருந்து நிலையம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.

  பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து கொண்டு சென்றனர்.