மணல் குவாரி அரசுக்கு சொந்தமா? தனியாருக்கு சொந்தமா? அரை நிர்வாண போராட்டம்!

மணல் குவாரி அரசுக்கு சொந்தமா? தனியாருக்கு சொந்தமா? அரை நிர்வாண போராட்டம்!

 ஜி.கே.சேகரன்,

 பாலாற்றில் புதியதாக அரசு மணல் குவாரி துவக்கம் லாரிகளுக்கு விற்பனை செய்வதை எங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆற்றினுள் அரை நிர்வாண போராட்டம் - மேலும் 21 இடங்களில் மணல் குவாரி அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதாக செயற்பொறியாளர் பேட்டி - கடும் வெய்யிலிலும் பாலாற்றில் நடந்த போராட்டத்தால் பதட்டம்.

 வேலூர்மாவட்டம்,வேலூர் அரும்பருதி அருகே சுமார் 5 ஹெக்டேர் பரப்பளவில் பாலாற்றில் மணல் குவாரியை தமிழக அரசு இன்று துவங்கியுள்ளது.

 பாலாற்றில் மணலை எடுத்து அருகிலுள்ள ஓர் இடத்தில் சேமித்து அதனை தமிழக அரசின் பொதுப்பணித்துறை விற்பனை செய்வதாக கூறியுள்ளது.

 இந்த ஒரு மணல் குவாரிக்கு மட்டுமே சுற்றுசூழல் அனுமதி கிடைத்துள்ளதால் இந்த மணல் குவாரியை இன்று துவங்கினார்கள்.

 ஒரு யூனிட் ரூ.3200 மணல் அரசு சார்பில் விற்கபடும் என அறிவித்து இன்று மணல் அள்ள துவங்கிய நிலையில் லாரிகளுக்கு மட்டும் மணல் குவாரி அமைக்கப்படுவதாக தெரிய வந்தது.

  இதை கண்டித்து மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தும் மாட்டு வண்டியில் உடனடியாக மணல் அள்ள அனுமதி வழங்க கோரி பாலாற்றில் மையப்பகுதியில் ஆற்றில் அமர்ந்து அரை நிர்வாண ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   மணல் அள்ளுவதற்காக பெரிய பெரிய பொக்லைன் எந்திரங்கள் ஆற்றின் கையோரம் கொண்டு வந்துநிறுத்தப்பட்டுள்ளது உயர்நீதிமன்றமோ பொக்லைன் மூலம் மனல் அள்ள கூடாது என அறிவித்துள்ள நிலையில் டிராக்டர்களும் பொக் லைன் இயந்திரங்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

  இந்த திடீர் போராட்டத்தை குறித்து அங்கு செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றதும் பொக் லைன் இயந்திரங்ககளை ஓரங்கட்டிவிட்டு கையில் அள்ளுவதாக அதிகாரிகள் நடித்தார்கள்.

  மேலும் புதியதாக 21 மணல் குவாரிகள் அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரியுள்ளதாகவும் அது கிடைத்தவுடன் அந்த குவாரியும் துவங்கப்படும் எனவும் காலையில் பொதுமக்கள் நேரடியாக மணல் ஆன் லைன் மூலம் பெறவு பிற்பகலில் லாரி உரிமையாளர்கள் மணல் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொக் லைன் கொண்டு வாரமாட்டோம் எனவும் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மணல் அள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் லெனின் பிரான்ஸிஸ் கூறினார்.

  பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டித்தொழிலாளர்களுடன் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு 10 சதவிகிதம் மணல் விற்பனையில் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர் பாலாற்றில் இந்த போராட்டத்தால் கொளுத்தும் வெய்யிலிலும் பதட்டம் காணப்பட்டது.

 இங்கு மணல் குவாரியை அரசு நடத்தினாலும் அங்கு தனி நபர்களே அனைத்து பணிகளையும் கவணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது