வருத்தப்பட்டு மேடையில் பேசிய அமைச்சர் துரைமுருகன்!

வருத்தப்பட்டு மேடையில் பேசிய அமைச்சர் துரைமுருகன்!

ஜி.கே.சேகரன்,

  என்னை கலந்து ஆலோசித்துவிட்டு நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம், எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது எத்தனை தடுப்பணைகளை கட்டியிருக்கிறேன் என்பதை வேலூருக்கு வந்து பாலாற்றை பார்த்தாலே தெரியும் நந்தன் கால்வாய்திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது பணிகள் செயல்படுத்தபடும் - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

 வேலூர்மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் 36 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் விரிவாக்கம் செய்து இயக்கும் திட்டம் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது.

 இந்த விழாவில் தமிழக நீர் வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்தார்.

 இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன்,நந்தகுமார்,அமுலு,நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்,மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு  உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.

  பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மினி பேருந்து திட்டம் இன்று துவங்குவதாக என்னை அழைத்தார்கள். அமைச்சர் என்ற முறையில் என்னை கலந்தாலோசித்திருக்கலாம்.  குறிப்பாக அனைக்கட்டு தொகுதி கேவிக்குப்பம் தொகுதிகளில் நிறைய கிராமப்பகுதிகள் உள்ளது.

 இதில் பேருந்து வசதிகள் கிடையாது அங்கும் பேருந்துகளை விட்டிருக்கலாம் நான் கலந்துகொள்ளாமல் இருந்துவிடலாம் என நினைத்தேன் இருந்தாலும் தமிழக முதல்வர் இத்திட்டத்தினை துவங்குகிறார்கள் அமைச்சர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் வந்தேன்.

  அரசியல் வாதிகள் நாங்கள் பஸ்விட சொல்லிவிடுவோம் ஆனால் மக்கள் அதில் பயணம் செய்தால் தான் பஸ்க்கு உரிய செல்வு தொகையாவது கிடைக்கும்.

 2 பேர் மட்டும் போனால் பேருந்து நஷ்டம் தான் ஆகும் அரசியல்வாதியாகி நாமும் கருத்தில் கொள்ள வேண்டுமென பேசினார்.

   பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் செய்தியாளர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன் நான் மருத்துவபரிசோதனைக்கு சென்றவுட்னே துரைமுருகனுக்கு கொரோனா என போட்டுவீட்டீர்கள்.

  எல்லோரும் என்னை தொடர்புகொண்டு கேட்டார்கள் அதை போல் தவறான செய்தியை போடாதீர்கள். எனக்கு வருத்தமாக இருந்தது. 2000 கோடி அணைகள் கட்ட ஒதுக்கியதில் எங்கே அணையை   கட்டினீர்கள் என எடப்பாடி கேட்டுள்ளார்.

 பாவம் எடப்பாடி பழனிசாமிக்கு எதுவுமே தெரியாது இங்கே வந்து பாலாற்றை பார்க்க சொல்லுங்கள் எத்தனை தடுப்பணை அமைத்துள்ளேன் என தெரியும்.

 எல்லா காலத்திலும் சில துஷ்டர்கள் இருக்கிறார்கள் அக்கால ராவணன் துவங்கி இன்று வரையில் துஷ்டர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

   நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளோம் அது செயல்பட துவங்கும் பாமக கூட்டணிக்கு வந்தால் திமுகவுடன் சேர்த்து கொள்வீர்களா என கேட்டத்தற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்று சொன்னார்.