வேலூர் மாநகராட்சியை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம்!

வேலூர் மாநகராட்சியை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம்!

கு.அசோக்,

 அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத மாநகராட்சியை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் போராட்டம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்

  வேலூ£ ¢மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தமிழ்புலிகள் கட்சியினர் மற்றும் வேலூர் மாநகராட்சியில் 48 ஆவது வார்டு சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் மக்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

   இம் மக்கள் வசிக்கும் பகுதியில் 120 வீட்டுமனைகள் உள்ளதாகவும் அவைகள் அரசு பதிவுத்துறை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் மேலும் அடிப்படை வசதிகளான சீரான சாலை வசதிகள் கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்து தர வேண்டும், மேலும் குப்பைகள்  தரம் பிரிக்கும் குப்பை கிடங்கால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது எனவே அங்கிருந்து குப்பை கிடங்கை அகற்ற வேண்டும்.

  மேலும் வீடில்லா ஏழை அருந்ததியர் மக்கள் 10-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும்.

  போன்றவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்புலிகள் கட்சியின் முதன்மை செயலாளர் முகிலரசன் மற்றும் மாநில செயலாளர் பலராமன் உள்ளிட்டோரும் பொதுமக்களும் கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தனர்.

  பின்னர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்