மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்!பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் வேண்டுகோள்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2021-22ஆம் கல்வியாண்டில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியில் சிறப்பு மருத்துவ முகாம் எட்டு வட்டார வளமையங்களில் நடைபெறவுள்ளது. *21.03.2022 அன்று வேலூர் அரசு முஸ்லிம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.
*22.03.2022 அன்று குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி.
*23.03.2022 அன்று தொரப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.
*24.03.2022 அன்று கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.
*25.03.2022 அன்று காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.
*26.03.2022 அன்று அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.
*28.03.2022 அன்று கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
*29.03.2022 அன்று பேர்ணாம்பட்டு அரசினர் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெறுகிறது.
பிறப்பு முதல் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறும் நாட்களில், முகாமில் கலந்து கொண்டு எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை, கண் சிறப்பு பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிறப்புப் பிரிவு, மனநலப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு ஆகிய மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின்படி உதவி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.
புதிய தேசிய அடையாள அட்டை வழங்குதல், யுடிஐடி அடையாள அட்டைக்கான பதிவுகள், கல்வி உதவித் தொகை (மத்திய / மாநில), எ.எல்.ஐ.எம்.சி.ஓ/சி.எம்.சி.எச்.ஐ.எஸ்/ மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக வழங்கப்படும் உதவி உபகரணங்கள் வழங்கிடுவதற்கான விவரங்கள் சேகரித்தல், அதிக உதவி தேவைப்படும் குழந்தைகளை கண்டறிதல், சிறப்பு பயிற்சிகள் (தசைப்பயிற்சி / பேச்சுப் பயிற்சி )., அறுவை சிகிச்சை. மற்றும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல் ஆகிய செயல்பாடுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, பிறப்பு முதல் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனுடைய குழந்தைகள் மேற்கண்ட முகாம்களில் பங்கேற்று பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு விடுக்கிறார்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்.