சஸ்பெண்டு செய்யப்பட்ட பணிதல மேற்பார்வையாளர்!திருப்பத்தூர் கலெக்டர் அதிரடி!

சஸ்பெண்டு செய்யப்பட்ட பணிதல மேற்பார்வையாளர்!திருப்பத்தூர் கலெக்டர் அதிரடி!

    ஆர்.ரமேஷ்,                                                                         

   திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி  ஊராட்சி ஒன்றியத்தில் ஊரகவளர்ச்சி துறையின் சார்பில் ரூ.39.93 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்; திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

   திருப்பத்தூர்  மாவட்டம்  கந்திலி  ஊராட்சி  ஒன்றியம் மானவள்ளி ஊராட்சியில் மகாத்மா  காந்தி  தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டத்தின(2020-21); கீழ ரூ.8.54 இலட்சம் நீர் உறிஞ்சும் அகழி  பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹாஇ.ஆ.ப., அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

 அதனை தொடர்ந்து திருப்பத்தூர்  மாவட்டம்  கந்திலி  ஊராட்சி  ஒன்றியம் மானவள்ளி ஊராட்சியில் மகாத்மா  காந்தி தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளையும்,

  பின்னர் திருப்பத்தூர்  மாவட்டம்  கந்திலி  ஊராட்சி  ஒன்றியம் பெரியகரம் புதூர் ஊராட்சியில் மகாத்மா  காந்தி  தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (2020-21)  கீழ் ரூ.6.44 இலட்சம பண்ணை குட்டை அமைக்கும் பணிகளையும்

 பெரியகரம் புதூர் ஊராட்சியில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் (2019-20) கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பில் வரும் வீடு கட்டும் பணியையும், அதே பகுதியில் மகாத்மா  காந்தி  தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (2020-21)   கீழ்; ரூ.6.36  இலட்சம் தூர்வாரும் பணியையும், கசிநாயக்கம்பட்டி ஊராட்சி நியாய விலை கடையினையும், ஆய்வு செய்த ஆட்சியர், அப்பொழுது மேற்பார்வையிடும் பணி தல பொறுப்பாளர் திருமதி.சுகுணா அவர்கள் பணிப் பதிவேடுகளை சரிவர பராமரிக்காத காரணத்தினால் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

 திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி  ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாத்மா  காந்தி  தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (2020-21) கீழ் ரூ.8.80 இலட்சம்  கட்டப்பட்டு வரும் சுற்றுசுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு, அப்பொழுது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஆங்கில பாடத்தினை கற்பித்தார்ர்.

 பின்னார் ம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் (2019-20) கீழ்; ரூ.5.75  இலட்சம்  புதிதாக கட்டப்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு,  அந்த அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு நடத்தினார்.

  அங்கு பதிவேடுகளை சரியாகப் பராமரிக்காவும், அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் கிராம நிர்வாக அலுவலக ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

  மேலும் சு.பள்ளிப்பட்டு  ஊராட்சியில் மகாத்மா  காந்தி  தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (2020-21)   கீழ் ரூ.1.53 இலட்சம பண்ணை குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

   இந்த ஆய்வுகளில செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி துறை) திரு.மகேஷ் குமார், உதவி திட்ட அலுவலர(கட்டிடங்கள்) திரு.ரூபேஷ் குமாரர், கந்திலி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர திரு.கலீல்ர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர், மாவட்டம்.