ஒய்யாரமாக நடந்து வந்த ஒற்றை தந்த காட்டுயானை!
கு.அசோக்,
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வனப்பகுதியில் இருந்து திருவண்ணாமலை வனக்கோட்டம் ஜமுனாமரத்தூர் வனப்பகுதிக்கு சாலை வழியாக ஒற்றைத் தந்தம் கொண்ட யானை ஒய்யாரமாக நடந்து வந்தது.
அந்த வழியே வந்த பேருந்து நின்றுவிட்டது. அப்போது அதனருகே வந்த யானை துதிக்கையால் பேருந்து சீட்டுகளை துழாவி திண்பண்டங்களை தேடியது, ஆனால் அங்கு எதுவும் இல்லாததால், அங்கிருந்து நடையை கட்டியது.
அந்தக்காட்சியை பேருந்தில் சென்ற பயணிகள் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவச் செய்தனர்.
கடந்த 2021 மே மாதம் ஜமுனாமரத்தூர் வனப்பகுதியிலிருந்து சென்ற ஒற்றை யானை நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜமுனாமரத்தூர் வனப்பகுதிக்கு வந்து தற்போது கோமுட்டேரி அருகிலுள்ள வீரப்பனூர் காப்புக்காடு பகுதியில் உள்ளது என வனத்துறையினர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்
மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத இந்த யானையின் நடமாட்டத்தை ஜமுனாமரத்தூர் வனச்சரக அலுவலர் குணசேகரன், வனவர் கிருஷ்ண மூர்த்தி ,வனக்காப்பாளர்கள் திருமலைவாசன்,பிரசன்ன மூர்த்தி,நித்தியானந்தம்,அழகுமணி ஆகியோர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத இந்த யானையின் நடமாட்டத்தை ஜமுனாமரத்தூர் வனச்சரக அலுவலர் குணசேகரன், வனவர் கிருஷ்ண மூர்த்தி ,வனக்காப்பாளர்கள் திருமலைவாசன்,பிரசன்ன மூர்த்தி,நித்தியானந்தம்,அழகுமணி ஆகியோர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளன
மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத இந்த யானையின் நடமாட்டத்தை ஜமுனாமரத்தூர் வனச்சரக அலுவலர் குணசேகரன், வனவர் கிருஷ்ண மூர்த்தி ,வனக்காப்பாளர்கள் திருமலைவாசன்,பிரசன்ன மூர்த்தி,நித்தியானந்தம்,அழகுமணி ஆகியோர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.